Thursday, May 10, 2007

பின்நவீன கடவுளர்களின் வருகைக்கான காத்திருப்புகள்




புதிரொன்றின் முடிச்சை
கட்டவிழ்க்கும் கணத்தின்
விளிம்பொன்றில்
இறுகத்தொடங்குகிறது
புதிதாய் ஒரு முடிச்சு

தனிமையின் வன்மங்கள்
நடனமிடும் நமது வெளி
சாத்தானின் இருப்பிடங்களெனவும்
அறியப்படுகிறது
முதல் சந்திப்பில்
மலர்வதென அரும்பியிருந்த
சிறுமொட்டொன்று
கருகிப்போனது
அனலெனத் தகிக்கும்
புனிதங்களின் வெளியில்

கடவுளர்கள் வகுத்த
பாதுகாப்பான எல்லைகளுக்குள்
சாத்தான்களை உலவவிட்டு
கழிவிரக்கம் நிரப்பி வாழும்
நம் உலகத்தின்
விளிம்புகளையும் மய்யத்தையும்
உடைக்க கிளர்ந்தெழுந்து வரும்
பின்நவீன கடவுளர்களின் வருகைக்காக
காத்திருக்கும் இப்பொழுதுகளில்
மாற்றி மாற்றி எழுதிக்கொள்ளலாம்
இதுபோன்ற சில அபத்தக் கவிதைகளை

3 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கழிவிரக்கத்திற்கு கவிழிரக்கம் என்று இருக்கிறது..
மய்யத்தையும் என்பது மையத்தையா குறிப்பிடுகிறீர்க்ள்.

கவிதை நன்றாக இருக்கிறது.

சென்ஷி said...

கடைசிப்பாரா நச்...

புரிதல்களில்
தொடங்கிய தேடல்
முற்றுப்பெற்றது
வயிற்றில் பசி..


சும்மா உங்க பாதிப்புல எழுதிப்பார்த்தேன். நமக்கும் ஏதாச்சும் வருதான்னு.. :))

சென்ஷி

Ayyanar Viswanath said...

முத்துலக்ஷ்மி

கழிவிரக்கம் மாத்திட்டேன் நன்றி :)
மையம் தான் மய்யம்

சென்ஷி
நல்லாவே வருது ..எழுதுங்க ..அட ஏற்கனவே நீங்க கவிஞர் தான

Featured Post

test

 test