Wednesday, September 5, 2007
இதும் அதும் எதும் எப்படியுமில்லா
இந்த விருட்சத்தைப் போலில்லை நான்
வேரூன்றி உயர்ந்து கிளைத்து
வெயில் வாங்கி நிழல் தந்து
எதுவுமில்லை
இந்த புல்லினைப் போலவுமில்லை
பசிய தளிராய் பனித்துளியின் இருப்பிடமாய்
பூனைகளின் தண்ணீரை சேகரித்தபடியுமாய்
இதுவுமில்லை
மழைக்காலங்களில் காட்டு மர இடைவெளிகளில்
வழிந்தோடும்
சிற்றோடை போலவுமில்லை
பெருகி படர்ந்து வழிந்து சுழித்து குறுகி நெளிந்து
சருகு முதல் சாக்கடை வரையாய் ஒன்று சேர்த்து வழிந்தபடி
இப்படியுமில்லை
பிறகெப்படி?
இதுவும் அதுவும் எதுவும்
இப்படியும் எப்படியுமில்லா
ஒரு மனிதனைப் போலிருக்கிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
தன்னுடைய இரண்டாவது படத்தை இரத்தமும் சதையுமாக வெயிலில் நிகழ்த்திக் காட்டிய வசந்தபாலன் மீண்டும் அதே இரத்த வாசத்தோடும், பிய்ந்து தொங்கும் சதை...
3 comments:
எங்களுக்குத்தான் தெரியுமே நீங்க தனியா வேற சொல்லனுமா அய்யனார் ;)
குசும்பன் எங்கிருந்தாலும் வரவும் :-)
nalla kavithai
ramesh v
Post a Comment