Wednesday, September 5, 2007

இதும் அதும் எதும் எப்படியுமில்லா



இந்த விருட்சத்தைப் போலில்லை நான்
வேரூன்றி உயர்ந்து கிளைத்து
வெயில் வாங்கி நிழல் தந்து
எதுவுமில்லை

இந்த புல்லினைப் போலவுமில்லை
பசிய தளிராய் பனித்துளியின் இருப்பிடமாய்
பூனைகளின் தண்ணீரை சேகரித்தபடியுமாய்
இதுவுமில்லை

மழைக்காலங்களில் காட்டு மர இடைவெளிகளில்
வழிந்தோடும்
சிற்றோடை போலவுமில்லை
பெருகி படர்ந்து வழிந்து சுழித்து குறுகி நெளிந்து
சருகு முதல் சாக்கடை வரையாய் ஒன்று சேர்த்து வழிந்தபடி
இப்படியுமில்லை

பிறகெப்படி?

இதுவும் அதுவும் எதுவும்
இப்படியும் எப்படியுமில்லா
ஒரு மனிதனைப் போலிருக்கிறேன்

3 comments:

கண்மணி/kanmani said...

எங்களுக்குத்தான் தெரியுமே நீங்க தனியா வேற சொல்லனுமா அய்யனார் ;)

கோபிநாத் said...

குசும்பன் எங்கிருந்தாலும் வரவும் :-)

Anonymous said...

nalla kavithai
ramesh v

Featured Post

test

 test