Wednesday, July 16, 2008

தமிழ்மணம் - சுந்தர் - என்னோட ரெண்டணா

சுந்தரின் காமக்கதைகள் இடுகை 'மாற்றம்'(இந்த மாற்றம் என்பதை நான் ஆரம்பத்திலிருந்து மிகச் சரியாகத்தான் புரிந்துகொண்டேன் என்பதை என் நண்பர் அறிவார்)எனக்கு வருத்ததை தந்தது.இடுகை மாற்றத்துக்கான விளக்கம் தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகளெனத் தாமதமாக தரப்பட்டது இன்னும் வருத்தத்தையளித்தது அதனால் என்னுடைய கருத்துக்களாக அதே பதிவில் இவ்வாறு பின்னூட்டமிட்டிருந்தேன்.

/பல்வேறு மக்களின் கருத்துகளை சுதந்திரமாக வெளியிடும் தளமாக/

இந்த வரிகளை படிக்கும்போது என் சிரிப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை ..மன்னிக்க…சுந்தரின் இடுகைகளை மாற்றம் செய்வது குறித்து அவருக்கு எந்த வித தகவலையும் நிர்வாகம் தந்திருக்கவில்லை அதனோடு இப்படியானதொரு புதிய விதிகளையும் முன்னரே தமிழ்மணம் தந்திருக்கவில்லை.ஒரு செயலை செய்துவிட்டு பின்னர் அதற்கான காரணங்களை சொல்வது சப்பை கட்டாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது…

ஒரு படைப்பாளியின் அனுமதியில்லாது அவரின் படைப்புகளை உங்களின் வசதி/நியதி களுக்கேற்றார்போல மாற்றங்களை செய்துகொள்ளும் செயலை நான் வன்மையாய் கண்டிக்கிறேன்..

உங்களின் நியதி / வசதிகளை முன்னரே தெரிவித்திருந்தால் அதற்குள இயங்கும் படைப்போ படைப்பாளியோ தனக்கான உண்மத்தத்துடன் இயங்கலாம்..இயங்கியிருக்கலாம் இப்படி தடாலென நீங்கள் ஒரு விதியை புகுத்துவது மாற்று எழுத்துக்களுக்கு எதிரானது..

சினிமா கிசுகிசுக்களோ அரைகுரை நிர்வாணபுகைப்படங்களோ புனித வார்த்தைகளுடன் வெளியிடப்படுமானால் அதை நிர்வாகம் கொண்டாடுமா?சூடான இடுகை என்பது தமிழ் மனங்களின் சிதைந்தவடிவத்தினுக்கான ஏற்ற இடம் அவ்விடத்தையே நீக்குவது இதுபோன்ற சிக்கலை தீர்க்கலாம்…

By அய்யனார் on Jul 10, 2008

அடுத்ததாக voice on wings பதிவில் சில பகிர்வுகளை இவ்வாறு வைத்திருந்தேன்
காமம் குறித்தான உரையாடல்களை வெகுசனம் எப்போதுமே ஏற்கப்போவதில்லை..சூழல்,முதிர்ச்சி என்பதெல்லாம் வானத்தில் இருந்து குதித்து வராது.சில பழிகளுடன் அதற்கான சாத்தியங்களை நிறுவுவதுதான் நம் எழுத்துக்கான குறைந்த பட்ச நேர்மையாய் இருக்க முடியும்..
நடுத்தர வர்க்கத்து பெண் அனானிக்கு,
காமக்கதைகள் பெண்களை பீதியடைச் செய்கிறது..தளத்திலிருந்து வெளியேற்றுகிறது..என்பதெல்லாம் உங்களுக்கான கற்பனை அல்லது உங்களின் நம்பிக்கைகள்..சுந்தரின் பதிவுகளில் கிருத்திகா, பெருந்தேவி போன்றோரின் பின்னூட்டங்களை பார்க்கலாம்.வலைப்பதிவர் சந்திப்பில் பெண்கள் கலந்துகொள்ளாததாலேயே அவர்கள் பயந்து போய் ஒளிந்துகொள்கிறார்கள் என்பது அபத்தமாய் இருக்கிறது..பொன்ஸ்,லக்ஷ்மி என சில விதிவிலக்குகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.மேலும் வலைப்பதிவர் சந்திப்பென்பது நட்பு ரீதியிலான ஒரு நிகழ்வே தவிர பெண்களுக்கான உரிமைகளை நிறுவும் இடம் அல்ல...

சமகால பெண்கள் உடல்மொழியை மிகத் தேர்ச்சியாகவே பேசுகிறார்கள்..கூச்சம் நாச்சம் என்பதெல்லாம் மரபின் வழி வந்த இயலாமைகள்தானே தவிர ஒட்டுமொத்த மதிப்பீடுகள் அல்ல...

மேலும்,காமத்தை தடை செய்தது மட்டுமே பிரச்சினையில்லை.இந்த விதயத்தை தமிழ்மணம் எதிர்கொண்ட அணுகுமுறையே ஒப்பாரிக்கான பின்புலமாகவும் இருக்கிறது...

July 12, 2008 10:58 PM

என்னுடைய பதிவில் என் எதிர்ப்பை சுட்டும் பொருட்டாக Warning : Adult content என்கிற பிறசேர்க்கையை வலுக்கட்டாயமாக திணித்திருந்தேன்.பின்பு செல்வராஜின் விளக்கப் பதிவின் பின்னூட்டத்திலும் என் நிலைப்பாட்டை இப்படி சொல்லியிருந்தேன்.

/இந்த விளக்கத்தை சற்று முன்னமே தந்திருந்தால்/
இதுதான் என்னுடைய ஆதங்கமாகவும் இருந்தது..வேலைப் பளு நேரமின்மை என்பவைகளை புரிந்து கொள்ள முடிந்தாலும்.அந்தந்த நிமிடத்தின் உணர்வுகள் அந்தந்த நிமிடத்திற்கானவை..உங்கள் விளக்கங்களுக்கு நன்றி..


இவ்விதமான எதிர் கருத்து பரிமாற்றங்களில் நான் எங்கேயும் என் கலக அடையாளத்தையோ,புரட்சிக்காரன் அடையாளத்தையோ காண்பித்திருக்கவில்லை.சொல்லப்போனால் அப்படியெதுவும் எனக்கில்லை.எனக்கான கருத்துக்களை நான் முன் வைக்கிறேன் அவ்வளவுதான்.போலி, புரட்சி, கலகம்,பினாவானா என்பதெல்லாம் அவரவர் சூட்டிக்கொள்ளும் பொதுப்புத்தி சார்ந்தவையே.தமிழ்மணத்தை நொண்டிக்கழுதை அதிகார பீடமாக நான் எப்போதும் கருதியதில்லை.எனக்கான நம்பிக்கைகள் பொய்க்கும் புள்ளிகளில் நான் என் நம்பகத்தன்மையை தக்கவைத்து் / மாற்றிக் கொள்ளும்பொருட்டு கேள்விகள் எழுப்புகிறேன் என்பதைத் தவிர்த்து வேறெந்த அடையாளமும் எனக்கில்லை.பிற அடையாளங்களுக்கான அவசியமோ தேவையோ எனக்கில்லை என்பதையும் என்னுடைய என் சார்ந்த நம்பிக்கைகளாக இங்கே சொல்லிக்கொள்கிறேன்.

அதிகாரக் கருமங்கள் பற்றிய புரிதல்களை நான் என்னளவிலிருந்தே தொடங்க விரும்புகிறேன்.அடுத்தவனை சுட்டிக்காட்டும் முன்பு என் ஓட்டைகள் எவை எவை என்பதை தெரிந்துகொள்ளவே நான் மிகவும் விரும்புகிறேன்.மேலும் இங்கே பினாவானா புரட்சிசெய்து கிழித்து நான் பெற்றுக்கொண்டதெல்லாம் என் நெருங்கிய நண்பர்களின் மூத்திரங்களை மட்டுமே என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.என்னுடைய இக்கருத்து கந்தசாமி போர்வை என் மீதான பிம்பங்களுடைய காரணங்களாக இருக்குமெனில் இந்நிகழ்வுகளுக்கு நான் நன்றி செலுத்தவே விரும்புகிறேன்.இறந்துவிட்ட ஒன்றின் பிம்பங்கள் உயிருள்ளதைக்காட்டிலும் பூதாகரமாய் வளர்ந்து நிற்பது இது போன்ற நிகழ்வுகளின் மூலம் உடைத்தெறியப்படுமெனின் அவற்றுக்கு நன்றி சொல்வதே நான் நம்பும் ஒன்றின் குறைந்தபட்ச அடியொற்றித்தனத்திற்கு வக்காலத்தாக அமைய முடியும்.

பெயரிலியின் முடிவினுக்கான குற்ற உணர்வுகளின் நீட்சியே இதை எழுதத் தூண்டியது. மேலும் இது குறித்து உரையாடவும் விருப்பமில்லை என்பதினால் நண்பர்கள் பின்னூட்டங்களைத் தவிர்க்கவும்.

2 comments:

நந்தா said...

அப்படித்தான் பின்னூட்டம் போடுவேன். என்ன பண்றியோ பண்ணிக்கோ.

Anonymous said...

ennada tambis and donga wallus .. sapaatiya?? sappat ramans..

Featured Post

test

 test