Sunday, January 4, 2009

1996 ஜனவரி 04

கங்கா,
இந்த நாளில் எழுதுவதற்கென என்னிடம் வார்த்தைகள் இல்லை.எப்போதோ படித்த இந்த கவிதை இந்த நாளினை கண்முன் நிறுத்துவதால் ..

கிழிக்கப்படாத நாட்காட்டி
புதுப்பிக்கப்பட்ட வலியைப்
பூசிக்கொண்டு வளையவரும் வீடு
உனக்குப் பிரியமானவை
பற்றிய எங்களின் பரிமாறல்கள்.

நீ வளர்த்த இன்னும்
பூக்கும் செடிகள்.
நாம் படித்த புத்தகங்கள்
நீ வாழ்ந்ததின் அறிகுறிகள்
தொலைக்கும் உலகம்.

பூஜைக்காய் பிரத்யேகமாய்
தேய்த்து அலம்பிய
பித்தளை,வெள்ளி.

நிஜம் தேய்ந்து
தெய்வமாகிப் போன
நீயற்று விடிந்த
இன்னும் ஒரு தினம்

- நன்றி கனிமொழி:கருவறை வாசனை..

Featured Post

test

 test