Tuesday, February 16, 2010

யோனி நிலம்


தொலைதூரத்தில்
வரைபடப் புள்ளிகளாய் தெரியும்
புகை மலை முகடுகளுக்குப் பின்னுள்ள
நிலத்தின் இதயத்திலிருந்து
கடல் துவங்குவதாகவும்
பிளந்த யோனியின் சாயல்களில்
விரிந்திருக்கும் மணற்வெளியில்
நீர் சலித்த மோகினிகளும்
வனம் சலித்த நீலிகளும்
தழுவிக் கிடப்பதாகவும்
நகரத்து யட்சியொன்று
அதன் பெரும் ஏக்கத்தை
என்னிடம் கடத்தியது

யோனி நிலக் கிளர்வுகளோடு
ஏங்கிச் செத்த நிகழ் வேட்கையின்
கொடுங்கனவில்
இலுப்பை முனியின் நீள்முடியைக்
கைவசப்படுத்திய என் முப்பாட்டித் தோன்றி
அவ்வுன்னத நிலங்களில்
மலங்கழித்துத் திரிவதாய்
கெக்கலித்தாள்

அவளறியாமல் அவளின் சுருக்குப் பையினுள்
தஞ்சம் புகுந்தேன்
காலத்தின் உறைந்த உதடுகளோடும்
புகையிலை வாசங்களோடும் பயணித்து
முடிவின்மையின் சாஸ்வதங்களை முத்தமிட்டபடி
விழுங்கக் காத்திருக்கும்
யோனி நிலத்தினுள் புதைந்து கொள்வேன்

8 comments:

manjoorraja said...

எப்பவும் போல மாறுப்ப்ட்ட கோணத்துடன் வித்தியாசமான கவிதை
வாழ்த்துகள்

"உழவன்" "Uzhavan" said...

ரசிக்கக்கூடிய வரிகள். அருமை

வால்பையன் said...

வழக்கம் போல் டரியல் ஆனேன்!

பா.ராஜாராம் said...

வால்பையன் said...
வழக்கம் போல் டரியல் ஆனேன்!

நானும் அருண்.

பா.ராஜாராம் said...

என்றாலும் ஐயனார்,

தனித்த பட்சி.உயரம்.அடையாளம்.

பறவையின் உயரம் பறத்தலில் அன்றோ?

அன்றோ!

☀நான் ஆதவன்☀ said...

:) ஒரு ஸ்மைலியோட நிறுத்திக்கிறேன் அய்ஸ்

குப்பன்.யாஹூ said...

காணி நிலம் வேண்டும் பராசக்தி

குசும்பன் said...

யோனி நிலத்தினுள் புதைந்து கொள்வேன்//

நீ புதைந்து போவ வேறு இடமே கிடைக்கவில்லையா?:)

Featured Post

test

 test