அவள்
சாதாரணமாய்
நடக்கும்போதே
முலைகள் குலுங்கும்
தாழ்முடி போட்ட
ஈரக்கூந்தல்
காட்டன் புடவையணிந்த
பிருஷ்டங்களை
முற்பகல் வரை
நனைத்துக் கொண்டிருக்கும்
பிற்பகலில்
பூனைச் சோம்பலாய்
புடவை விலகித்
தளிர் தொப்பூழ் காட்டும்
மலர்ந்த மாலையில்
முதலில் தென்படும் நட்சத்திரமாய்
முகம் ஜ்வலிக்கும்
இரவு ஆடைக்குள்
மொத்த மென்னுடலும்
சதா தளும்பிக் கொண்டிருப்பதைப்
பார்த்துக் கொண்டிருப்பதுதான்
அந்த நாளின்
மிகப் பதட்டமான தருணமாகவிருக்கும்
நள்ளிரவிற்குச் சற்று முன்பு
சன்னல்கள் அடைபடும்
எனக்காய்
விழித்திருக்கும்
கால்களற்ற
இரவின் மேசையில்
எண்ணற்றப் பந்துகள்
அசையாமல் காத்திருக்கும்
நீரிழந்த மீனாய்
பந்துகளோடு சேர்ந்து கொண்டு
மெல்லத் துடிக்க ஆரம்பிப்பேன்
Subscribe to:
Post Comments (Atom)
Featured Post
test
test
-
1.இடாகினிப் பேய்களும் நடைப்பிணங்களும் சில உதிரி இடைத் தரகர்களும்-கோபி கிருஷ்ணன் சமீபத்தில் எனக்கு கிடைத்த கோபி கிருஷ்ணனின் எழுத்துக்களை ம...
-
வெகு குறுகிய கால விடுப்பில் ஊருக்கு சென்றிருந்தபோது பிரளயனின் பாரி படுகளம் நவீன நாடகத்தை பார்க்கச் சந்தர்ப்பம் கிட்டியது.பிரளயனின் வீதி நாடக...
-
தன்னுடைய இரண்டாவது படத்தை இரத்தமும் சதையுமாக வெயிலில் நிகழ்த்திக் காட்டிய வசந்தபாலன் மீண்டும் அதே இரத்த வாசத்தோடும், பிய்ந்து தொங்கும் சதை...
2 comments:
முதலே சாய்க்கிறது.
arumai
Post a Comment