Wednesday, April 5, 2017

ஓரிதழ்ப்பூ - மீளுதல்




ஓரிதழ்ப்பூ - குறுநாவலை விட்ட இடத்திலிருந்து எழுத ஆரம்பிக்கிறேன். இந்நாவலின் முதல் அத்தியாயத்தை 2013 ஆம் வருடம் மே மாதம் 27 ஆம் தேதி வெளியிட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இதை மனதால் மட்டும் சுமந்து கொண்டிருக்கிறேன். ஒரு நாவலை இரண்டு இடைவெளிகளில் எழுத முடியுமா, அதே மனநிலை வாய்க்குமா என்கிற சந்தேகங்கள் எனக்கும் இருக்கின்றன. ஆனால் பழியையும் இரண்டு பாகங்களாகத்தான் எழுதினேன். முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் ஆறு மாத கால இடைவெளி என நினைக்கிறேன். நன்றாகத்தான் வந்தது. என்றாலும் ஓரிதழ்ப்பூவிற்கு விழுந்து விட்ட இடைவெளி அதிகம்தான். வெளியிட்ட ஏழு அத்தியாயங்களை வாசித்த நண்பர்கள் நன்றாக வந்திருப்பதாகவும் விரைவில் எழுதி முடிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்கள். அவர்களுக்காவது இதை எழுதி முடிக்க வேண்டும் என விரும்பினேன். நடக்கவில்லை. இப்போது நிகழும் போல் தோன்றுகிறது.

 பழி, மழைக்காலம், இருபது வெள்ளைக்காரர்கள் மூன்றும் குறுகிய காலத்தில் எழுதப்பட்டவை. உடனடியாக அச்சிலும் புத்தகமாக வெளிவந்தது. அந்த உற்சாகத்தில் மூன்று குறுநாவல்களை தனித் தனியாய் எழுத ஆரம்பித்தேன். மூன்றில் ஓரிதழ்ப்பூ படபடவென விரிந்தது. இதன் களமும் எனக்குப் பிடித்திருந்தது. இதே நினைவில் கிடந்துழலுவது சிறிய போதையாகக் கூட இருந்தது. எதனால் முடிக்க முடியாமல் போனது என்பதைத் துழாவிக் கொண்டிருக்கப் போவதில்லை. தினம் சில பத்திகளையாவது எழுத முடியும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது. மேலும் நினைவில் இந்நாவலை சுமந்து கொண்டு அலைவது அலுப்பாகவும் இருக்கிறது.

 இப்போது வாசிப்பவர்களுக்காக, ஏழு அத்தியாயங்களின் சுட்டிகளைத் தருகிறேன். புகைப்படங்கள் அனைத்தும் நண்பன் பினு பாஸ்கருடையவை. அத்தியாயங்களுக்கு மிகப் பொருத்தமாக அவை இருந்தன.

  ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் ஒன்று

  ஓரிதழ்ப்பூ - அத்தியாயம் இரண்டு

  ஓரிதழ்ப்பூ அத்தியாயம் மூன்று

  ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் நான்கு

  ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஐந்து

  ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஆறு

  ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஏழு


 இனி எட்டிலிருந்து துவங்குகிறேன்.

No comments:

Featured Post

test

 test